கோயமுத்தூர் யெங் இந்தியன் சேப்டர்ஸ் சார்பில் இன்று நடிகர் ஸ்ரீகாந்த் "கோவை விழா"வினை துவக்கி வைக்கிறார்


கோயமுத்தூர் 'யெங் இந்தியன்' சேப்டர்ஸ் அமைப்பின் சார்பில் இன்று "கோவை விழா 2017" துவக்க நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

கோவை மாவட்டத்தின் பிரபலமான புரூக்பீல்ட் வனிகவளாகத்தில் நடைபெறவுள்ள இதன் துவக்க நிகழ்ச்சியில் நடிகர் ஸ்ரீகாந்த் சிறப்பு விருந்தினராக பங்கேற்று துவக்கி வைக்க உள்ளார். 

இதைத்தொடர்ந்து இந்நிகழ்ச்சியில், கோயமுத்தூர் யெங் இந்தியன் சேப்டர்ஸ் அமைப்பினரால் உருவாக்கப்பட்ட "கோவை விழா பாட்டு" வெளியீடு நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளது.

மேலும், கடந்த ஒரு வருடமாக யெங் இந்தியன் அமைப்பினரால் மேற்கொள்ளப்பட்ட சமூகச் சேவை, 'நோ ஹாரன்', குழந்தைகள் மீதான வன்முறைகள் குறித்த விழிப்புணர்வு, 'ஸ்வச் பாரத்' தூய்மை பணி உள்ளிட்டவை குறித்து வீடியோவும் வெளியிடப்பட உள்ளது. தொடர்ந்து, கோவையின் சமூக மேம்பாட்டாளர்கள், தன்னார்வலர்கள் உள்ளிட்டோர் கவுரவப்படுத்தப்பட உள்ளனர். பின், நடிகர் ஸ்ரீகாந்த் பார்வையாளர்களிடம் கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளார்.

முன்னதாக, கோவை விழா இன்று துவங்கி வரும் பிப்ரவரி 5ம் தேதி வரை புரூக்பீல்ட் வனிகவளாகம் உட்பட மாவட்டத்தின் பல்வேறு முக்கியப் பகுதிகளில் நடைபெறும் எனவும், இவ்விழாவின் போது பல்வேறு தனியார் அமைப்புகள் கோவை யெங் இந்தியன் சேப்டர்ஸ் உடன் இணைந்து அவ்வமைப்பின் பேனரின் கீழ் 90 நிகழ்ச்சிகள் நடத்தப்படும் எனவும் இதன் ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.

மேலும், கடந்த வருடத்தை விட இவ்வருடம் பல்வேறு விதமான நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளதால் ஏராளமானோர் இதில் பங்குபெருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாகவும் இந்நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...